உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பெல்காட் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா யாதவ். இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுதொடர்பாக அரசல் புரலாக பெண் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் ரஞ்சனா யாதவை அழைத்து அந்த காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்து தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி ஜிக்னா (Jigina) பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் இறந்தது ரஞ்சனா யாதவ் என அடையாளம் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ரஞ்சனா தனது காதலை விட மறுத்ததால் அவரது குடும்பத்தினரே அவரை உயிரோடு எரித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.