தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
“கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி காங்கிரஸ் 138 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 62 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் கட்சி உற்சாகம் கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.