இன்றைய காலகட்டத்தில் மாறி வரும் உணவு முறைகள் காரணமாக பொதுவாக பலருக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வாயு பிரச்சனை.
வயிற்றில் கேஸ் நிறைவது, செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் என தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
வயிற்று பிரச்சனைகள் அனைத்திற்குமே பொதுவான ஒரு எளிய மருத்துவத்தை வீட்டிலிருந்தே செய்ய முடியும்.
வெண்ணெய் நீக்கிய மோர் எடுத்துக் கொண்டு அதில் ஓமம், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் , உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து கலந்து விட்டு குடித்து விட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே முடிவுக்கு வரும். இந்தக் கலவையை பகல், இரவு, மாலை , மதியம் என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம்.
உணவு முறைகளிலும் கட்டுப்பாடோ, சாப்பாட்டிற்கு முன், வெறும் வயிற்றில் என எந்தவிதக் கட்டுப்பாடுகளும் தேவையில்லை. இதன் மூலம் வாயுப் பிரச்சனை, செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் என அனைத்துப் பிரச்சனைகளும் சரியாவதை நீங்களே கண் கூடாக பார்க்கலாம்.