உலக அளவிலான ஸ்மார்ட்போன்(smartphone) சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனத்தில் ஒன்று சாம்சங். வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து ஒவ்வொரு முறையும் மேம்படுத்தப்பட்ட திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது, சாம்சங் நிறுவனம் பிரீமியம் மிட்-ரேன்ஜ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த ஸ்மார்ட்போன் SM-F415 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாகவும், வைபை அலையன்ஸ் சான்று பெற்று இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை விரைவில் சந்தைப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவித மெமரி(memory) ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும், இந்த ஸ்மார் போன்(smartphone) பச்சை,நீலம் மற்றும் கருப்பு என மூன்று நிறங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.