பாஜகவில் இணைந்து விட்ட பிறகு டெல்லியில் இருந்து சென்னை வந்த குஷ்புவுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு நேற்று டெல்லியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய அவரை பாஜக தொண்டர்கள் விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 6 வருடம் கழித்துத்தான் தாம் நடிகை என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரிகிறதா???? என கே.அழகிரியை விமர்சித்தார். மேலும் “சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்” என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியில் இருக்கிறவர்களுக்கும் கட்சியை விட்டு செல்பவர்களுக்கும் மரியாதை இல்லை எனவும் குஷ்பு தெரிவித்தார்.மேலும் தனது கணவர் சுந்தர்.C விருப்பத்தின் பேரில் தான் பாஜகவில் இணையவில்லை,என்றும் தெரிவித்தார்.