கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகபட்ச பாதிப்பு சென்னையில் பதிவாகி வருகிறது. எனவே தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் 2022ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், மீண்டும் கலைவாணர் அரங்கில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செதுள்ளது. 50% இருக்கை கட்டுப்பாடு காரணமாக வரும் 5 ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த சட்டமன்ற கூட்டத்தொடர், இடநெருக்கடி காரணமாக, தலைமைச்செயலக வளாகத்தில் இருந்து, கலைவாணர் அரங்கத்திற்கே மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.