அரசியல்

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாய்நாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி செல்வி இருவரும் தற்போது மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மாலை போட்டு உள்ளதால் 9 நாள் விரதம் அனுசரித்து இன்று விடியற் காலை 2:45 மணிக்கு கோவிலிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவரது வீட்டில் அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் அவரது வீட்டு வராண்டாவில் நிறுத்திவைக்கப்பட்ட இருக்கர வாகனம் தீபற்றி எரிய
துவங்கியது . அதிகாலையில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததை கண்டு வீட்டின் மாடியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டதோடு, காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசியதால் இருசக்கர வாகனம், கட்டில், டிவி, தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செங்கம் பேரூராட்சிக்கான 2 வது வார்டு கவுன்சிலருக்கான விருப்பமனு திமுக சார்பில் விஜயகுமார் அளித்ததாகவும் கவுன்சிலர் சீட்டு இவருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கும் வேளையில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.


Share
ALSO READ  அதிமுக ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக உறவுகளின் சக்தி: டிஜிட்டல் யுகத்தில் வெற்றியைத் திறக்கிறது

News Editor

முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; அ.ராசா விளக்கம் !

News Editor

அறியாமை இருளில் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் – அமைச்சர் மஃபாய்

Admin