இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தெம்பா பவுமா அதிகப்பட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் ஜோர்டான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய்(70 ரன்கள்), இயான் மோர்கன்(52 ரன்கள்) அதிரடியாக விளையாடியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தின் த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2வது டி20 போட்டி நாளை (பிப்ரவரி 14) நடைபெறுகிறது.