தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஸ்ரீவில்லிப்புத்தூரில் காதலர் தினத்தையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதியான நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வழக்கம் போல காதலுக்கு ஆதரவு ஒருபுறமும், எதிர்ப்பு ஒருபுறமும் இருந்தது.
இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதில் ‘சாதி, மத ஒழிப்பு என்பது ரத்த கலப்பின் மூலமே சாத்தியம்..ரத்த கலப்பு என்பது காதலின் மூலமே சாத்தியம்.. ஆதலால் காதல் செய்வீர்” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரின் பல்வேறு பள்ளி சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.