பொதுவாக வீடுகளில் வெள்ளி, தங்கம் போன்ற பொருட்கள் காணாமல் போவது வழக்கமான ஒன்று. ஆனால் இங்கே இதெல்லாமா திருடுவாங்க என்று கேட்கும் வகையில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் இரவில் மட்டும் பெண்களின் உள்ளாடை திருட்டு போய் உள்ளது.இப்படி அடிக்கடி உள்ளாடைகள் திருட்டு போவதை கவனித்த அப்பகுதி பெண்கள் சிசி டிவியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதில் ஒருவன் லுங்கி கட்டிக்கொண்டு காம்பவுண்ட் எகிரி குதித்து வீட்டின் உள்ளே வருகிறான். பின்பு வெளியில் காய்ந்து கொண்டிருக்கும் உள்ளாடைகளை திருடி விட்டு,வீட்டின் உரிமையாளரின் படுக்கை அறையையும் எட்டிப் பார்த்துவிட்டு செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் அப்பகுதி பெண்கள் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி பதிவை வைத்து யார் அந்த பலே திருடன் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.