தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27,30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து வத்தலக்குண்டு அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யசோதா என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரது கணவர் முருகேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். தற்போது இந்த பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் மனைவியை தேர்தலில் நிறுத்தி பிரசாரம் செய்து வந்துள்ளார்.
அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயக்கமடைந்தார். இதனால் அதிச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மற்ற வேட்பாளர்களும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.