தமிழகம்

சென்னையில் கொரோனா பாதித்த சிறுவன் தப்பி ஓட்டம்.. போலீஸ் தேடுதல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தப்பியுள்ளான்.

ALSO READ  ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிகளுக்கு கொரோனா...

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அப்போது சிறுவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து 4 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு சிலை!

Shanthi

கிஷோர் கே. ஸ்வாமி மீது நடிகை ரோகிணி போலீசில் புகார்…!

naveen santhakumar

பசி மயக்கம்.. 3 வேளை உணவு.. ஆட்சியருக்கு தமிழில் நன்றி கூறிய ரஷ்ய பயணி…..

naveen santhakumar