தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்( 43). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 15 நாட்களாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்காளகவே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், இன்று அதிகாலையில் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ALSO READ  கோயம்பேட்டில் பேருந்தில் திடீர் தீவிபத்து!

அவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவியும், ஜீவா (13) என்ற மகனும் உள்ளனர். அவரது மனைவி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஆவடி திருமுல்லைவாயலில் வசித்து வருகிறார்கள்.

இச்சம்பவம் சக பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா…

இதனிடையே, ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல் முருகனுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2 நாளைக்கு சரக்கு கிடைக்காது… டாஸ்மாக்கில் முண்டியடித்த குடிமகன்கள்!

naveen santhakumar

காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… காவல்துறை அதிரடி!

naveen santhakumar

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

News Editor