தமிழகம்

புத்தாண்டு தினத்தில் கோரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆங்கில் புத்தாண்டு தினமான இன்று சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி – பாறைப்பட்டி செல்லும் வழியில் இயங்கி வரும் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான ஆர்.வி.பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வெடிமருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால் இரு அறைகள் வெடித்து தரைமட்டமாகின. மொத்தம் 10 அறைகள் உள்ள நிலையில், அடுத்தடுத்து உள்ள 7 அறைகள் சேதமடைந்தன.

இந்த கோரவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு மற்றும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சிவகாசி பகுதி மக்களை பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share
ALSO READ  தரமற்ற ஆவின் பால்…..வாடிக்கையாளர் அதிர்ச்சி:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்… டாஸ்மாக் கடைகள் மூடல்!

naveen santhakumar

ஜன- 9 முதல் 11 வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Admin

துக்ளக் இருந்தால் அறிவாளி – ரஜினி பேச்சு

Admin