தமிழகம்

தரமற்ற ஆவின் பால்…..வாடிக்கையாளர் அதிர்ச்சி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

ஆவின் பால் பாக்கெட்டில் பூச்சி போன்று கருப்பு நிறத்தில் காணப்பட்ட பொருளால் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவன பால் விற்பனைக்கு வருவதற்கு முன்பு பல்வேறு  வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

மேலும் பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகு தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த பால் பாக்கெட்கள் ஆவின் நிறுவனத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பால் விற்பனை நிலையம் மற்றும் மளிகை கடைகளுக்கு பால் பாக்கெட்டுகளை வழங்குகின்றனர். 

ALSO READ  கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு!

அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் நைஸ் பால் பாக்கெட்டுகள் கோயம்பேடு திருவீதியம்மன் கோயில் தெருவில் உள்ள மளிகை கடைகளில் விற்பனை செய்யப்பட்டது.அதில் ஒரு வாடிக்கையாளர் வாங்கிய பால் பாக்கெட்டில் பூச்சி போன்று ஒரு பொருள் கருப்பு நிறத்தில் இருப்பது தெரிந்தது. அந்த வாடிக்கையாளர் இதை கடையின் உரிமையாளரிடம் காண்பித்துள்ளார். 

அப்போது அவர், அந்த பால் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு மற்றொரு ஆவின் பால் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த வாடிக்கையாளர், தனியார் நிறுவன பால் பாக்கெட்டை வாங்கி சென்றுள்ளார். சுகாதாரமற்ற முறையில் ஆவின் பால் பாக்கெட் விற்கப்பட்ட அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ALSO READ  இத்தனை பேர் பாலியல் தொல்லை கொடுத்தார்களா..???? அதிரவைக்கும் ரேவதி சம்பத்.....

ஆவின் நிறுவனத்தின் மெத்தனமான போக்கே இதற்கு காரணம் என்று கடையின் உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி  வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பலே கில்லாடி…ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம்….

naveen santhakumar

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டம் -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Admin

அட்டகாசமான ரூல்ஸ்….இன்று முதல் அமலுக்கு வருகிறது…..மக்களே உஷார்…..

naveen santhakumar