தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
2022ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
திமுக ஆட்சி அமைத்த பிறகு 2வது முறையாகவும், 2022ம் ஆண்டில் முதல் முறையாகவும் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக ஜார்ஜ் கோட்டையில் நடைபெறவிருந்த சட்டமன்ற கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.