தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளை மே 11ம் தேதி முதல் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தினங்களுக்கு முன்னர் ஃபெப்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் செய்வதற்கு தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தனர் இந்நிலையில் அதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தயாரிப்புக்கு பிந்தைய டப்பிங், கிராபிக்ஸ் பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி அளித்ததுள்ளது.
பணியாளர்கள் கட்டாயம் அனுமதி சீட்டு பெற வேண்டும். மேலும், சமூக இடைவெளி, முக கவசம் அவசியம். கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.