தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருவண்ணாமலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டு கொள்ளவதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில்,தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி அசோசியேசன் சார்பில் தலா 1 லிட்டர் பெட்ரோல், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வழங்கப்பட்டது.
இந்த முகாமை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் முருகேஷ் பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி அசோசியேசன் நிர்வாகிகளை பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.