Truecaller மூலமாக பெண்களின் வாழ்க்கையை சீரழித்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவர் குரோம்பேட்டையில் ஒரு வீட்டில் தங்கி உள்ளார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தாலும், பெண்களை தன் வலையில் விழ வைப்பதையும் ஒரு தொழிலாக செய்து வந்துள்ளார்.
ஓய்வாக இருக்கும் நேரத்தில் truecaller செயலியில் குத்துமதிப்பாக 10 இலக்க எண்களை பதிவு செய்து அதில் ஏதாவது பெண்கள் பெயர் வந்தால், அந்தப் பெண்ணின் நம்பரை சேமித்துக் கொண்டு அவர்களுடன் போலியாக பழகி வந்துள்ளார்.
பின்பு அந்தப் பெண்களிடம் உரையாடி ஆபாச வீடியோக்களை பகிர்ந்து காதலிப்பது போல் நடித்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு கல்லூரி மாணவியிடம் வினோத் இவ்வாறு செய்ய முயன்றபோது, அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் வினோத்தை கைது செய்துள்ளனர்.அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரை 50 பெண்களின் வாழ்க்கையை வினோத் சீரழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.