தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்களுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சீன மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் நோய்தொற்று உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும் வீடு மறந்து, ஓய்வறியாமல் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் எந்தநேரமும் மாஸ்க் அணிந்திருந்ததால் சீன செவிலியர்களின் முகத்தில் காயம் ஏற்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனால் செவிலியர்களின் சேவை மனப்பான்மையை உலகமே கொண்டாடி வருகிறது.
விரைவில் சீன மக்கள் இத்தகைய துன்பங்களில் இருந்து வெளிவர வேண்டும் என அனைவரும் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.