தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சான் பிரான்சிஸ்கோ:-
கொரோனா பரவல் அச்சத்தால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை தங்கள் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு (Work From Home) உத்தரவிட்டு உள்ளன. டணேபோல் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவையும் இவ்வாறு உத்தரவிட்டு உள்ளன.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் தொகையை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.74 ஆயிரம் ) போனஸாக வழங்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார்.
இந்த போனஸ் தொகை ஃபேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவன ஊழியர் ஒருவர் சராசரியாக ஆண்டொன்றுக்கு 2,28,651 டாலர்கள் ஊதியமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1,69,11,207 ரூபாய் ஆகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.