ரியாத்:
சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
சவுதி அரேபியாவில் ஜி 20 மாநாடு முதன்முறையாக நடைபெறுகிறது. தலைநகர் ரியாத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த மாநாடு இன்று (நவம்பர்-21-ம் தேதி) துவங்கியது.
இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்து கொண்டார். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்.
அனைவருக்கும் 21 ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்ற தலைப்பின் கீழ் மாநாடு நடைபெறுகிறது.
கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்தும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் வளரக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகளை பகிர்ந்து கொள்ள தைரியமான உத்திகளை கடைபிடித்தல் போன்ற தலைப்புகளில் மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.