தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஜெர்மனியை சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியில் 700 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
ஜெர்மனியின் North rhine-westphalia பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 18 யூரோ டாலர் செலவு செய்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு பரிசுத்தொகையில் ரூ.700 கோடி கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு பரிசுத்தொகையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நபர் இதுவரை பரிசுத்தொகையை கைப்பற்றவில்லை. அந்நாட்டின் லாட்டரி சட்டத்தின்படி 2023ம் ஆண்டு வரை இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
அந்த நபர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஜெர்மனியில் லாட்டரியில் கிடைத்த பரிசுத்தொகை குறிப்பிட்ட காலத்திற்கு பின் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.