19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கடப்பாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கிரிக்கெட் தொடரில் சண்டிகர்- அருணாசல பிரதேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட் செய்த சண்டிகர் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அருணாசல பிரதேச அணிக்கு எமனாக அமைந்தார் சண்டிகர் வீராங்கனை காஸ்வீ கௌதம்.
அவரது ஒன் மேன் ஆர்மி தாக்குதலால் சின்னாபின்னமானது அருணாசல பிரதேச அணி.
25 ரன்களில் சுருண்ட அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் காஸ்வீ கௌதமே வீழ்த்தினார். இதில் 8 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆயினர். 10 விக்கெட்டுகளை வீழ்த்திய காஸ்வீ கௌதமை ‘லேடி அனில் கும்ப்ளே’ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.