உலகப் பணக்காரர்களில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இரண்டாம் இடத்திலிருந்து தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை, எலோன் மஸ்க் பின்னுக்குத் தள்ளியுள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் அனைவரின் பொருளாதாரமும் இறங்கு முகமாக இருந்த நிலையில் இவரின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. எலக்ட்ரிக் வாகனங்களில் முதலீடு செய்வதன் மூலம் எலன் மாஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்ததாக கூறப்படுகிறது.
அதனையடுத்து எலோன் மஸ்கின் நிகர மதிப்பு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துவரும் பெசோஸை விட 1.5 பில்லியன் டாலர் அதிகம். ஆகையால் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் எலான் மஸ்க்.
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 13வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.