உலகம்

நடுரோட்டில் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய வாலிபர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வியட்நாம் நாட்டில் இரு வாலிபர்கள் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வியட்நாம் நாட்டின் டுவாங் மாகாணத்தை சேர்ந்த ஹூய்ன்தன் கான் என்ற இளைஞர் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் செய்த செயல் பொதுமக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

சட்டை அணிந்திராமல் பயணம் மேற்கொண்ட அவர்கள் இருவருக்கும் நடுவில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொண்டனர். பின்னால் இருந்த வாலிபர் இருவர் மேலும் தண்ணீரை ஊற்றி சோப்பு போட்டு குளித்தனர்.

ALSO READ  பாதுகாப்பு உடைகள் இல்லை.. குப்பை போடும் பைகளை அணியும் அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவமனை பணியாளர்கள்...

இதனை வீடியோவாக பதிவுசெய்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட வைரலாக பரவியது. வீடியோவில் உள்ள பைக்கின் எண்ணை வைத்து இருவரையும் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்.

மேலும் லைசன்ஸ் இல்லாத நபருக்கு பைக்கை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் அரிய நோய் குறைபாடு…

naveen santhakumar

கொரோனா தடுப்பூசி இலவசம்-பிரான்ஸ் பிரதமர்

naveen santhakumar

இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சிறுமி!!!!!அடுத்து நேர்ந்த சோகம்…..

naveen santhakumar