தமிழகம்

2500 பேர் பங்கேற்கும் மாநில அளவிலான பப்ஜி போட்டி … கிளம்பிய எதிர்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறவிருந்த மாநில அளவிலான பப்ஜி போட்டி கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

சிவகங்கையில் உள்ள கல்லல் சௌந்திரநாயகி உடனுறை சோமசுந்தரரேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள மாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழகமே உற்று நோக்கிய வித்தியாசமான போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது.

ஆம். இளைஞர்களின் பெரும் பொழுதுபோக்கு விளையாட்டான ‘பப்ஜி’யை மாநில அளவிலான போட்டியாக நடைபெறும் அறிவித்தது.

ALSO READ  தெலுங்கு படவுலகில் எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா மேனன் !

மார்ச் 5ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்ட இந்த போட்டியில் காலை முதல் இரவு வரை நடைபெறும். முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3வது பரிசு ரூ.20 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது.

இதில் 2500 பேர் வரை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து புகார்களும் பறக்க, காவல்துறையினரின் விசாரணையில் அனுமதி பெறாமல் இத்தகைய போட்டி அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ALSO READ  62 இடங்களில் வெற்றி… டெல்லி தேர்தலில் அசத்திய ஆம் ஆத்மி…

இந்தநிலையில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது:

naveen santhakumar

தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொலை செய்த தாய் கைது

News Editor

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :

naveen santhakumar