உலகம்

கொரோனா பரவல்- 20 அழகிகளுடன் அந்தபுரத்தில் ஐக்கியமான தாய்லாந்து அரசர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தாய்லாந்து:-

மொத்த உலகமே கொரோனாவால் அல்லோகலப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்த எந்தவித கவலையுமின்றி தாய்லாந்து நாட்டில் அரசர் அழகிகளுடன் உல்லாசமாக உள்ளார்.

தாய்லாந்து அரசர் மகா வஜிரலொங்கோன் (67) (Maha Vajiralongkorn) இவர் பத்தாவது ராமா (Rama X) என்றும் அழைக்கபடுபவர்.

தற்போது ஜெர்மனியின் ஜுக்ஸ்ப்லிட்ஸ் (Zugspitze) மலையடிவாரத்தில், கார்மிஷ்ச்- பார்டெகிர்சென் (Garmisch-Partenkirchen) நகரில் உள்ள ஆல்பைன் (Alphine) என்ற நட்சத்திர விடுதியில், 20 அழகிகளுடன் (Concubines), தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.

கொரோனாவால், தாய்லாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அல்லாடி வரும் நிலையில், அந்நாட்டு அரசரோ, தன் அந்தபுரத்தையே ஜெர்மனிக்கு இடம்பெயர்த்திருக்கிறார். இது அந்நாட்டு மக்களை கடுங்கோபம் அடைய செய்துள்ளது.

ALSO READ  துனிசியாவில் துயரம்....43 பேர் பலி...

மன்னரை விமர்சித்தால் 15 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றபோதும், தாய்லாந்து மக்கள், அரசர் மகா வஜிரலொங்கோனை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுவரை தாய்லாந்து நாட்டில் 1245க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் தாக்கிய இடத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

Admin

உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020…

naveen santhakumar

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா… 

naveen santhakumar