தாய்லாந்து:-
மொத்த உலகமே கொரோனாவால் அல்லோகலப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்த எந்தவித கவலையுமின்றி தாய்லாந்து நாட்டில் அரசர் அழகிகளுடன் உல்லாசமாக உள்ளார்.
தாய்லாந்து அரசர் மகா வஜிரலொங்கோன் (67) (Maha Vajiralongkorn) இவர் பத்தாவது ராமா (Rama X) என்றும் அழைக்கபடுபவர்.
தற்போது ஜெர்மனியின் ஜுக்ஸ்ப்லிட்ஸ் (Zugspitze) மலையடிவாரத்தில், கார்மிஷ்ச்- பார்டெகிர்சென் (Garmisch-Partenkirchen) நகரில் உள்ள ஆல்பைன் (Alphine) என்ற நட்சத்திர விடுதியில், 20 அழகிகளுடன் (Concubines), தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.
கொரோனாவால், தாய்லாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கே அல்லாடி வரும் நிலையில், அந்நாட்டு அரசரோ, தன் அந்தபுரத்தையே ஜெர்மனிக்கு இடம்பெயர்த்திருக்கிறார். இது அந்நாட்டு மக்களை கடுங்கோபம் அடைய செய்துள்ளது.
மன்னரை விமர்சித்தால் 15 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றபோதும், தாய்லாந்து மக்கள், அரசர் மகா வஜிரலொங்கோனை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுவரை தாய்லாந்து நாட்டில் 1245க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.