உலகம்

கிறிஸ்மஸ் கொண்டாட சென்ற மாடல் அழகி: 470 கோடி கொள்ளையடித்த மர்ம நபர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் கொண்டாட சென்ற மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லண்டனைச் சேர்ந்தவர் தொழில் அதிபரும், பார்முலா ஒன் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பென்னி எக்லெஸ்டோன். இவரது மகள் பிரபல மாடல் அழகி தமரா எக்லெஸ்டோன் ஆவார்.
இவருக்கு அங்குள்ள கென்சிங்டன் நகரில் 55 அறைகளைக் கொண்ட சொகுசு மாளிகை ஒன்று உள்ளது. அங்கு தன் கணவர் மற்றும் ஐந்து வயது மகளுடன் வசித்து வரும் தமரா கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் பின்லாந்து சென்றார்.

ALSO READ  பறக்கும் விமானத்தில் இருந்து ஆப்கானியர்கள் விழுந்த காட்சி...!

இதனை அறிந்த கொள்ளையர்கள் அவரது வீட்டின் எடுத்துக் கொண்டு 50 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 470 கோடி ஆகும். தன் வீட்டில் கொள்ளை நடந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமரா மிகுந்த கோபம் அடைந்துள்ளார்.

காரணம் அவரது வீடு அமைந்துள்ள தெரு எந்நேரமும் கண்காணிப்பில் இருக்கும். அங்கு காவலர்கள் 24 மணி நேரமும் சோதனைச் சாவடிகள் அமைத்தும், ரோந்து சுற்றி வருவார்கள்.அதனையும் மீறி கொள்ளை நடந்துள்ளது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவை தடுக்க மால்நியூபைராவர் மாத்திரை கண்டுபிடிப்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்

News Editor

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin

ZOOM App இல் உள்ள ஆபத்துக்கள் என்ன? விரிவாக விளக்கும் நிபுணர்கள்..

naveen santhakumar