நமது பற்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கோவக்காய் பெரிதும் பயன்படுகிறது.ஆரோக்கியமான உடலை பெற அன்றாடம் நம் உணவில் ஏதேனும் ஒரு காய்கறி, பழங்களை சேர்ப்பது அவசியம். கோவக்காயை நமது உணவில் சேர்ப்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.
கோவக்காயின் இலை மற்றும் தண்டின் கசாயம் மார்புச் சளி, சுவாசக்குழாய் அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. சொரியாசிஸ், சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு கோவக்காயை மூன்று வேளையும் ஜூஸ் போன்று அருந்தி வந்தால் விரைவில் குணமாகும். ஆனால் இவற்றை குடிப்பதற்கும் வயிற்றை சுத்தம் செய்து கொள்வது அவசியம்.
கோவை இலையை வெண்ணெயுடன் கலந்து உடலில் ஏற்படும் புண்களில் தடவி வந்தால் விரைவில் புண்கள் ஆறி தழும்புகள் மறைகிறது. மேலும் தலையில் ஏற்படும் பொடுகு,முடி உதிர்வு போன்ற பெரும் பிரச்சனைகளுக்கு கோவைக்காய் சிறந்த தீர்வாக அமைகிறது. கோவக்காய் ஜூஸ் பிழிந்து மீதமாகும் சக்கையை எலுமிச்சை பழத்தில் கலந்து தலையில் தடவினால் பொடுகு முற்றிலும் குறையும். அதேபோல் பற்களில் ஏற்படும் பல் வலி, ஈறு வீக்கம், ரத்தக் கசிவு, மஞ்சள் கறை ஆகியவற்றிற்கு கோவக்காய் ஜூஸ் சிறந்ததாகும்.