தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடெல்லி:-
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நிகழ்த்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு (Lockdown 3.0) வரும் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது ஊரடங்கு முடிவடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தவுள்ளார். இதன்மூலம் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்புகள் வெளியாகலாம்.
முன்னர் இது போன்று உரை நிகழ்த்திய பொழுது பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கருத்துக்களை மக்களுக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.