சினிமா

சாத்தான்குளம் சிறை மரணம்: நடிகர் ஜெயம் ரவி-ன் காட்டமான ட்வீட்…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாத்தான்குளம்:-

சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் உரிய நீதி வேண்டும் என்று காட்டமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர் .

கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்தாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இவர்களை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடைத்தனர். விசாரணைக் கைதிகளாக இருந்த இருவரும் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இவர்களது மரணம் தமிழகத்தையே உலுக்கியது.

பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கடையடைப்பு செய்ணனர். அதுமட்டுமின்றி காவல்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.  

ALSO READ  நடிகர் நானி திரைப்படம் பூஜையுடன் இன்று தொடக்கம் 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.

அதில், சட்டத்தை விட உயர்ந்தவர் எவரும் இல்லை, மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்கு நீதி வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ  'ஜகமே தந்திரம்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இதேபோல, நடிகை குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்கார் வாங்கிய திரைப்படம் விஜய் படத்தின் காப்பியா?

Admin

பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி

naveen santhakumar

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்… வெளியானது சூப்பர் அப்டேட்!

naveen santhakumar