தமிழகம்

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக  தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.  நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

ALSO READ  இறப்பதற்கு முன்பே தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்:

நேற்று முன் தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஐவர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உள்ளிடோரும் கலந்துகொண்டனர்.

நேற்று முதல்வரை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மின்விசை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையை கொரோனா நிவாரணமாக வழங்கிய நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை ஊழியர் உயிரிழப்பு..!

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினிகாந்த் வீடியோவை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்…

naveen santhakumar

நடிகை குஷ்பூ அமைச்சரை சந்தித்து வேண்டுகோள்….

naveen santhakumar

மதுரையில் கொடூரம்…..இளைஞர் தலையை வெட்டி தேவாலயத்தின் முன்பு வைத்த கும்பல்…..

naveen santhakumar