தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கோவை ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் அந்த பொறுப்பை ஏற்றார் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்பொழுது அவரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பையும், மாவட்ட ஆட்சியர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.