சென்னை:-
தலைமறைவாக உள்ள ‘பப்ஜி’ மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
யூடியூப் பப்ஜி நேரலையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார்.
இதைத்தொடர்ந்து, மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் பெண்களை ஆபாசமாகத் திட்டுதல், தடைச் செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதனின் சேனலுக்கு நிர்வாகியாக செயல்பட்டதால் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.