நம் முன்னோர்கள் பலவிதமான மூலிகைகளின் பலன்களை அறிந்து உண்ணும் உணவில் அதனை சேர்த்து வந்தனர்.இந்த காலகட்டத்தில் நமக்கு உணவருந்த கூட நேரமில்லை,அதில் சத்துள்ள உணவு எதுவென்று தேடியா சாப்பிட போகிறோம்.
இருப்பினும் நாம் எளிதில் கிடைக்கும் சில மூலிகைகளை பற்றி கட்டாயம் அறிந்திருந்த வேண்டும்.அதில் ஒன்று தான், ஓமவல்லி இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.
*ஓமவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும்.
*கட்டிகளுக்கும் இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
*ஓமவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.
*ஓமவல்லி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.
*கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
*வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
*ஓமவல்லி இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்