மாதுளை என்றாலே முத்துக்கள் தான் நம்முடைய ஞாபகத்திற்கு வரும். இது நம்முடைய இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மற்றும் ஹீமோ குளோபின் அளவை அதிகப்படுத்தும் என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயம்.மாதுளை பழத்திற்கு ‘சைனஸ் ஆப்பிள்’ என்ற ஒரு மற்றொரு பெயரும் உண்டு. ஆப்பிளை போலவே இதற்கும் பல நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு பழமாகும்.
மாதுளை பழத்தின் தோலைக் காயவைத்து அதனை பொடியாக்கி சருமத்திற்கு படுத்துவதன் மூலம் உங்களுடைய சருமம் பளபளப்பாக காணப்படும். மேலும் மாதுளை பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளதால் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.இதன்மூலம் இருதய நோய்கள், சரும நோய்கள், புற்று நோய்கள் வராமல் நம்மால் தடுக்க முடியும்.
ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 40% சதவீதம் அளவு விட்டமின் C தேவைப் படுகிறது, அந்த முழு சதவீதத்தையும் ஒரு மாதுளை பழம் பூர்த்தி செய்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் நம்முடைய ஜீரண சக்திக்கு ஒரு டானிக்காகவும் இருக்கும். மேலும் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்கள் நமது ஒட்டுமொத்த உடலையும் அலர்ஜியில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் செல்கள் பாதிப்படைவதைத் தடுத்து, செல்களை புதுப்பிக்கவும், பாதிப்படைந்த செல்களை சரிசெய்யவும் உதவுகிறது.
மாதுளை பழம் இதயத்திற்கும் நண்பன் என்று கூறலாம். ஏனெனில் இதயம் மற்றும் அதனை சுற்றி உள்ள ரத்தக் குழாய்களையும் இந்த மாதுளை பழம் பாதுகாக்கிறது. ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.