ஜோதிடம்

மறந்தும் கூட…… இந்த பொருட்களை யாருக்கும் தானமாக…. கொடுத்துவிடாதீர்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தானங்கள் செய்வது நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தரும். பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்ட வாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை “வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்” என வள்ளலார் அருளியிருக்கிறார்.

எனினும் சிறப்பான பலன்களை தரக்கூடிய தானத்தை கூட நாம் ஒரு சில பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. 

ALSO READ  காஞ்சிபுரம் இட்லி

அந்த வகையில் இந்த 3 பொருட்களை தானமாக கொடுத்தீர்கள் என்றால், அது நமக்கு பாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். 

ALSO READ  கொரோனா பாதிப்பால் மதுபானங்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய அரசு முடிவு

பழைய உணவுகளை தானமாக கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும்.

மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களையும் தானமாக கொடுத்து சிரமங்களை விலைக்கு வாங்கி கொள்ளாதீர்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு: 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 12 வயது சிறுமி மரணம்…

naveen santhakumar

கொரோனா பரவல் இடையே மஹாராஷ்ட்ராவில் தேர்தல்… தேர்தல் ஆணையம் அனுமதி…

naveen santhakumar

நீங்கள் இப்படி சாப்பிடுபவராக இருந்தால்….. நிச்சயம் உங்கள் வீட்டில் தரித்திரம் கங்ணம் ஸ்டைலில் நடனமாடும்:

naveen santhakumar