தமிழகம்

விழுந்துச்சு கல்….அடிக்குது ஷாக்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமநாதபுரம்:

தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் பகுதியில் விண்கல் விழுந்ததாக தகவல் ஒன்று பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராமத்தில் ரத்தினம் என்பவரின் வீட்டின் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு பயங்கர சத்தம் கேட்டது.

காலையில் எழுந்து பார்த்தபோது தோட்டத்தில் விசித்திரமான கல் ஒன்று கிடந்தது. இது விண்கல்லாக இருக்குமோ???? என்று அவருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கல்லை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ  PSBB விவகாரம்: நடிகர் ஆரி காட்டம்…!

இதுகுறித்து ரத்தினம் கூறுகையில், ”நள்ளிரவு திடீரென பலத்த சத்தம் கேட்டநிலையில், காலையில் பார்த்தபோது வித்தியாசமான கல் ஒன்று கிடந்தது.முதல்முறையாக அதை தொட்டபோது மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. விண்ணிலிருந்து இந்த கல் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்னதானம் முதல் அனாதை பிணம் வரை அடக்கம் செய்யும் அமிர்தம் அறக்கட்டளை !

News Editor

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி..!

News Editor

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு..!

Admin