குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் வகையில் “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் “ஒரே நாடு, ஒரே ரேசன்” திட்டம் அமல்படுத்தபட்டு வந்தது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்தக் ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் அரிசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அரசாணையையும் தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம்-23ம் தேதி வெளியிட்டிருந்தது.இந்த நிலையில், “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம் தமிழகத்தில் நாளை துவங்க உள்ளது.இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். இத்தகைய சிறப்பான திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற இயலும்.