சென்னை:
நம் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறமைகளால் சாதித்து கால் தடத்தை பதித்து வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் தொகுக்கப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இரண்டு சதவீதத்திற்கும் மேற்பட்ட தமிழக விஞ்ஞானிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் 36 பேராசிரியர்களுடன் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் பல்வேறு விதமான ஆராய்ச்சி கட்டுரைகளை செய்து வருகின்றனர். ஒலியியல் ஆராய்ச்சி,உயிர் தகவலியல்,உயிர் பொறியியல்,கட்டிடம் மற்றும் கட்டுமானம்,ரசாயன பொறியியல்,மின் பொறியியல்,ஆற்றல்,சுற்றுச்சூழல் பொறியியல்,தொழில்துறை பொறியாளர்,ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபோட்டோனிக்ஸ்,உடல் வேதியியல் போன்ற துறைகளின் ஆர்ய்ச்சிக் கட்டுரைகள் இந்த வல்லுநர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானிகளின் விவரங்களாவன;
1)திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் 7 விஞ்ஞானிகள்.
2)அண்ணாமலை பல்கலைகழகம்-9 பேர்.
3)பாரதியார் பல்கலைக்கழகம்-8பேர்.
4)தமிழக மத்திய பல்கலைக்கழகம்-2பேர்.
5)மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்-2பேர்.
6)மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்-2பேர்.
7)அழகப்பா பல்கலைக்கழகம்-2பேர்.
8)பாரதிதாசன் பல்கலைக்கழகம்-2பேர்.
9)பெரியார் பல்கலைக்கழகம்-1நபர்.
10)அண்ணா பல்கலைக்கழகம்-1நபர்.
11)சென்னை பல்கலைக்கழகம்-நபர்.