பாலிவுட் நடிகை பாயல் கோஸஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக அவரின் முன்னாள் மனைவிகளும் மற்றும் திரைத்துறை துறையினரும் குரல் கொடுத்து வந்தனர்.
இருந்தபோதும் பாயல் கோஷ் தனது நிலையில் உறுதியாக இருந்து இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்து வந்தார். மேலும் தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை பாயல் கோஷ் சந்தித்துப்பேசினார். அதனையடுத்து சுஷாந்த் சிங் மரணம், பாலிவுட் போதைபொருள் விவரங்களுக்கு பிறகு இந்த குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த பாயல் கோஷ் தற்போது மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள, “பாயல் கோஷ் நான்கு மாதங்கள் கடந்துவிட்டன, ஆதாரங்களை நான் சமர்ப்பித்த போதிலும் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நான் இறந்தால் தான் அனைத்தும் விரைவாக நடக்குமா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.