இந்தியா

9 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்குகிறார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி: 

ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா 2,000 ரூபாய் உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்க உள்ளார்.

பிரதமரின் ‘கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது.

ALSO READ  பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை! 

உதவித்தொகை வழங்கும் பணிகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணிக்கு துவங்கி வைக்கிறார். அப்போது, ஆறு மாநில விவசாயிகளுடன் அவர் பேசுகிறார். இத்திட்டத்தின் பயன் மற்றும் தங்கள் நலனுக்காக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை, விவசாயிகள் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Indian: Official Site, Enrollment, Bonus 25000 Logi

Shobika

மீண்டும் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி !

News Editor

Azərbaycanda onlayn kazino Pin Up Pin Up slot maşınlar

Shobika