சினிமா

விஜய்சேதுபதி நடிப்பில் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மௌன படம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழை தவிர தெலுங்கு. மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இதனிடையே  விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய் சேதுபதி தற்போது துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்தாக ஹிந்தியில் உருவாகும் மவுனப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘காந்தி டாக்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ALSO READ  மெட்ராஸ் பட ரித்விகா வா இது.. பட்டாம்பூச்சி உடையில் கலக்கல்

கமல் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான ‘பேசும் படம்’ மவுன படத்திற்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மௌன  திரைப்படம் உருவாகவுள்ளது.  இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. 

#makkalselvan #vijaysethupathi #vijay #master #mownam #kamalhassan #hindimovie #tamilthisai #tamilcinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தளபதி 65″படம் குறித்து  ஒளிப்பதிவாளர் ட்வீட் !

News Editor

பிரபலங்களை குறி வைக்கும் கொரோனா… இளம் நடிகருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar

“கருப்பன் குசும்புக்காரன்” டயலாக்கால் மக்களை கவர்ந்த சூரியின் அப்பாவா இது????

naveen santhakumar