சினிமா

‘நேற்று இன்று நாளை 2’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2015-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்  ‘இன்று நேற்று நாளை’. ஆர்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

தமிழ் சினிமாவிற்கு புதிய கதைக்களமான ‘டைம் ட்ராவல்’-லை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற தகவல் நீண்ட நாட்களாக வலம் வந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.  

படத்திற்கான கதையை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் எழுத, அறிமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்குகிறார். இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இத்தகவலை தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ALSO READ  கொரோனா தடுப்பு நடவடிக்கை; அதிகாரிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரஜினிகாந்த் பயணம்

News Editor

முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்ட ‘மாநாடு’ படக்குழு !

News Editor

சிம்புவிற்கு உணவு ஊட்டும் தாய்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor