உலகம்

தொடரும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் உலக நாடுகள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.  

இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

உலகளவில் 10.30 கோடி பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7.52 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22.39 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1.07 கோடியை தாண்டியுள்ளது.


Share
ALSO READ  மீம்களில் சவப்பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஆடும் இவர்கள் உண்மையில் யார் ???
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழந்த 95% பேர் இந்த வயதினர் தான்- WHO….

naveen santhakumar

பதப்படுத்தப்பட்ட கரு மூலம் குழந்தை பெற்றெடுத்த தம்பதி :

naveen santhakumar

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

Admin