சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில் நடிகர் மாதவன், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் மிலிந்த் சோமனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நடிகர் மிலிந்த் சோமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் மிலிந்த் சோமன் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.