உலகம்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்; இந்திய பெண்மணி உயிரிழப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதேசமயம் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக மே 9 முதல் மே 10ஆம் தேதிவரை ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடுவதாக இருந்தது. இதனையடுத்து இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதன்தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்தின் காஷா முனையை தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்தநிலையில், ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நேற்று (11.05.2021) நடத்திய வான்வெளி தாக்குதலில் இந்தியவர் ஒருவர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்துள்ள மத்திய அரசு   கேரளாவைச் சேர்ந்த 31வயதான சௌமியா சந்தோஷ் என்பவர், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் பலியானது கூறியுள்ளது.

ALSO READ  பேட் கம்மின்ஸ், பிரட்லீயை தொடர்ந்து இந்தியாவிற்கு நிதியுதவி அளித்த சச்சின் !

இவர்  இஸ்ரேல் நாட்டில் வயதானவர்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல தன் பணியை முடித்துவிட்டு தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது தாக்குதலில் சிக்கி  சௌமியா சந்தோஷ் உயிரிழந்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

53 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பர்ஸ் ஒன்று மீண்டும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்…..

naveen santhakumar

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்

naveen santhakumar

கொரோனா வைரஸ் தாக்கத்திலும் கூட உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரம் ஆக மாறியது இந்தியா.

naveen santhakumar